அத்தியாவசிய சேவைகளுக்காக கொழும்பிற்குள் நுழையும் வாகனங்களுக்கு சிறப்பு ஸ்டிக்கர்
கொழும்பு நகரத்திற்குள் அத்தியாவசிய தேவைகளுக்காக நுழையும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்த பின்னர் இன்று (02) முதல் ஒரு நாளைக்கு மாத்திரம் செல்லுபடியாகும் சிறப்பு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்று போலீஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த ஸ்டிக்கர் 24 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் எனவும் பயண கட்டுப்பாடுகளின் போது ஒரே வாகனத்தை பல தடவைகள் பரிசோதிப்பதால் ஏற்படும் தாமதங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
போலீஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறுகையில், தவறான தகவல்களை அளிப்பதன் மூலம் ஒருவர் கொழும்பு நகரத்திற்குள் நுழைகிறார் என்ற சந்தேகம் இருந்தால், அத்தகைய வாகனங்களுக்கு ஸ்டிக்கர்கள் வழங்கப்படமாட்டாது, அத்தகைய வாகனங்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.
source:newsfirst
308 Views
Comments