கொரோனாவின் மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைக் கடன் திட்டம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
02

கொரோனாவின் மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைக் கடன் திட்டம்

கொரோனாவின் மூன்றாவது அலையினால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான சலுகைக் கடன் திட்டம்

மூன்றாவது அலை கொரோனாவால் பாதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கான நிவாரண திட்டங்களை செயல்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

 

அதன்படி, வேலை இழப்பு, வருவாய், ஊதிய இழப்பு, விற்பனையில் குறைவு மற்றும் இழப்பு அல்லது வணிகங்களை மூடுவது போன்ற சிரமங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கடன் தொகை அல்லது கடனுக்கான வட்டி இரண்டையும் ஆகஸ்ட் 31 வரை ஒத்திவைப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

 

கடனுக்கு விண்ணப்பிக்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜூன் 21 அல்லது அதற்கு முன்னர் எழுத்து மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்க வேண்டும்.

 

ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணத்திற்காக மட்டுமே தாமதமான கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 

 

 

 

 

source:https://www.cbsl.gov.lk/

views

239 Views

Comments

arrow-up