பயணக் கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று முதல் ரூ. 5000 கொடுப்பனவு...
கொரோனா காரணமாக பயணக் கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன் கருதி இன்று (02) முதல் மீண்டும் ரூ .5000 கொடுப்பனவை மூன்று கட்டங்களின் அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மீன்பிடி குடும்பங்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
இந்த நடவடிக்கைகள் கிராம உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் பிரதேச செயலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளது.
source:newsfirst
221 Views
Comments