நேற்றைய தினம் 3000க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பதிவு
மேலும் 738 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, நேற்று (இரவு 10.00 மணி) வரை 3,306 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 192,547 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றைய தினம் 1,504 பேர் குணமடைந்துள்ளார்கள்.
இதன்படி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்தோரின் எண்ணிக்கை 160,714 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (ஜூன் 2) அன்று கொரோனா மரணங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை.
மேலும் மே 17 முதல் ஜூன் 1 வரை 39 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
source:அரசாங்க தகவல் திணைக்களம்
258 Views
Comments