தனியார் வங்கிகள் எடுத்த முடிவு...
நாட்டின் முன்னணி தனியார் வணிக வங்கிகள் பல இன்று (07) முதல் சாதாரண வங்கி சேவைகளுக்காக ஒரு வாரம் மூடப்படும் என்று அறிவித்துள்ளன.
நாட்டில் புழக்கத்தில் உள்ள கட்டுப்பாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன.
அதன்படி, கொமர்ஷல், சம்பத், செலான், டி.எஃப்.சி.சி, நேஷன்ஸ் டிரஸ்ட், அமானா, யூனியன் வங்கி ஆகியவை தங்கள் கிளை வலையமைப்பை வாரம் முழுவதும் மூடுவதாகவும், ஹட்டன் நேஷனல் வங்கி தனது கிளைகளைநாளை (08) மற்றும் நாளை மறுநாள் (09) மூடுவதாகவும் தெரிவித்துள்ளன..
இதற்கிடையில், இந்த வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகளைப் பெற டிஜிட்டல் வங்கி சேவைகளைப் பயன்படுத்துமாறு வலியுறுத்துகின்றன.
178 Views
Comments