இன்று பல மாகாணங்களிலும் மழை பெய்யும்
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் இன்று (07) சில நேரங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும். சுமார் 50 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மாலை அல்லது இரவில் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
ஏனைய இடங்களில், முக்கியமாக வறண்ட வானிலையே காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்வதால் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய அபாயங்களை குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
source:வளிமண்டலவியல் திணைக்களம்
160 Views
Comments