அலங்கார இலை செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை

மத்திய மாகாணத்தில் கிராமிய மட்டத்தில் அலங்கார இலைகளின் செய்கையை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அலங்கார இலைகள் உள்ளிட்ட சில வகையான செய்கைகளின் மூலம் விவசாயிகள் அதிக வருமானத்தை ஈட்ட முடியுமென மத்திய மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்துள்ள நிலையில், ஹோட்டல்களை அலங்கரிக்கும் இந்த அலங்கார இலைகளுக்கு அதிக கேள்வி நிலவுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
126 Views
Comments