வௌ்ள அனர்த்தங்களால் 159,511 பேர் பாதிப்பு - இடர்முகாமைத்துவ நிலையம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
16

வௌ்ள அனர்த்தங்களால் 159,511 பேர் பாதிப்பு - இடர்முகாமைத்துவ நிலையம்

வௌ்ள அனர்த்தங்களால் 159,511 பேர் பாதிப்பு - இடர்முகாமைத்துவ நிலையம்

நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

 

40,758 குடும்பங்களை சேர்ந்த 159,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

2,433 குடும்பங்களைச் சேர்ந்த 10,361 பேர் 80 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

 

ஒரு வீடு முழுமையாகவும் 370 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தரவுகள் பதிவாகியுள்ளன.

 

ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாக இடர் முகாமைத்துவ  நிலையம் தெரிவித்துள்ளது.

 

அனர்த்தங்களால் கம்பஹா மாவட்டத்தில் 20,553 குடும்பங்களைச் சேர்ந்த 82,839 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

views

135 Views

Comments

arrow-up