மலேரியாவுக்கு எதிரான தடுப்பூசி ஆப்பிரிக்காவில் ஆரம்பமாகிறது
மலேரியா தடுப்பூசி தற்போது மில்லியன் கணக்கான ஆப்பிரிக்க குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றத் தொடங்கியுள்ளது.
புதிய தடுப்பூசி பல ஆப்பிரிக்க நாடுகளில் மருத்துவ பரிசோதனைகளில் பயன்படுத்தப்படுகிறது.
இது உலகின் முதல் மலேரியா எதிர்ப்பு தடுப்பூசியாகும்.
"இது ஒரு வரலாற்று நடவடிக்கை" என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் ட்ரோடோஸ் கிரேபியஸ் கூறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 229 மில்லியன் மலேரியா வழக்குகள் பதிவாகின்றன. அவற்றில் 94% ஆப்பிரிக்காவில் இருந்தாகும்.
2019 ஆம் ஆண்டில், 260,000 குழந்தைகள் மலேரியாவால் இறந்துள்ளனர்.
மலேரியா எதிர்ப்பு மருந்துகள் மற்றும் கொசு வலைகள் மலேரியா பரவுவதைக் குறைப்பதாகக் காட்டப்பட்டாலும், தடுப்பூசியால் அதை பெரிய அளவில் குறைக்குமென நம்பப்படுகிறது.
233 Views
Comments