சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் தொடர்பில் 100 சந்தேகநபர்கள் கைது

சட்டவிரோத தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் தொடர்பில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த இரண்டு வார காலப்பகுதிக்குள் 39 சம்பவங்கள் தொடர்பில் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த காலப்பகுதிக்குள் 8 இலட்சத்திற்கும் அதிகமான சட்டவிரோத சுவரொட்டிகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளன.
சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகளை அகற்றுவதற்காக 1592 தொழிலாளர்கள் நாடளாவிய ரீதியில் கடமையில் இணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
110 Views
Comments