AUG
30
நாட்டில் ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன...
இன்று (30) கோவிட் தொற்று காரணமாக 216 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்று (29) உறுதிப்படுத்தினார்.
இன்றைய 216 மரணங்கள் இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் அதிக எண்ணிக்கையாகும்.
அதன்படி, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கோவிட் தொற்று மரணங்களின் எண்ணிக்கை 8991 ஆக அதிகரித்துள்ளது.
இன்று பதிவான மரணங்களில் 115 ஆண்களும் 101 பெண்களும் அடங்குவர்.
source:hirunews
144 Views
Comments