639 பேர் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கை மீறியுள்ளனர்
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறிய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதாக 639 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அதன்படி, தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதாக இதுவரை மொத்தம் 57,435 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மேல் மாகாணத்தில் 13 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் அமைக்கப்பட்ட சாலைத் தடுப்புகளில் நேற்று 1,369 வாகனங்கள் மற்றும் 2,284 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர்.
source:adaderana
128 Views
Comments