உலக சதுப்பு நில தினம்

உலக சதுப்பு நில தினம் இன்றாகும்.
எதிர்காலத்திற்காக சதுப்பு நிலங்களை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இம்முறை உலக சதுப்பு நில தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 ஆம் திகதி ஈரானின் ரம்சார் நகரில் சதுப்புநில பாதுகாப்பு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
இந்த உடன்படிக்கையில் இலங்கை 1991 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது.
திட்டமிடப்படாத நிர்மாணங்கள், அகழ்வுகள் மற்றும் கழிவுகள் என்பனவற்றினால் எமது நாட்டின் சதுப்புநில கட்டமைப்பு பாரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
மனித செயற்பாடுகளாலும் சில வகையான தாவரங்களின் பரவல் போன்ற இயற்கை காரணங்களாலும் சதுப்பு நிலங்கள் அழிவடைவதாக சூழலியலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
68 Views
Comments