எல்லை தாண்டி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
11

எல்லை தாண்டி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் கைது

Sea of Sri Lanka கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். 

 

இன்று(11) அதிகாலை மீனவர்கள் 13 பேரும் அவர்கள் பயணித்த 3 படகுகளுடன் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். 

 

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

 

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் Sea of Sri Lanka எனப்படும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்த 252 இந்திய மீனவர்கள் 35 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

204 Views

Comments

arrow-up