மின் கட்டணத் திருத்த யோசனையை வழங்க 2 வாரங்கள் தேவை - இலங்கை மின்சார சபை

மின்சாரக் கட்டணத்தை குறைப்பது தொடர்பான புதிய யோசனையை முன்வைப்பதற்காக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மேலும் 2 வார கால அவகாசம் கோரியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தரவுகளை பகுப்பாய்வு செய்து மேலதிக கணக்கீடுகளை மேற்கொள்ளவுள்ளதால் கால அவகாசம் கோரப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
புதிய யோசனையை கடந்த 8ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்திருந்தது.
இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் கட்டணத் திருத்த விலைச் சூத்திரத்தின் கீழ் இணங்குவதில் காணப்பட்ட சிக்கல்களால் புதிய யோசனை கோரப்பட்டிருந்தது.
118 Views
Comments