தனியார் வாகன இறக்குமதிக்கு பெப்ரவரி முதல் அனுமதி - ஜனாதிபதி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
19

தனியார் வாகன இறக்குமதிக்கு பெப்ரவரி முதல் அனுமதி - ஜனாதிபதி

தனியார் வாகன இறக்குமதிக்கு பெப்ரவரி முதல் அனுமதி - ஜனாதிபதி

2028ஆம் ஆண்டில் நாட்டின் அந்நிய செலாவணியை 15.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் விசேட உரை நிகழ்த்துகையிலேயே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

 

பொதுத் தேர்தலின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் மூன்றாவது மீளாய்வை ஆரம்பித்ததாகவும் அதில் இரண்டாம் மீளாய்வில் இணங்கிய விடயங்களில் பல திருத்தங்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

உழைக்கும் போது அறிவிடப்படும் வரி ஒரு இலட்சம் என்ற வரையறை மூன்றாம் மீளாய்வின் போது ஒன்றரை இலட்சம் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இதன்பிரகாரம், ஒன்றரை இலட்சம் மாதாந்தம் சம்பளம் பெறுவோருக்கு 100 வீதம் வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

2 இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 71 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், இரண்டரை இலட்சம் சம்பளம் பெற்றுக் கொள்ளும் ஒருவருக்கு 61 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதோடு, 3 இலட்சம் சம்பளம் பெறும் ஒருவருக்கு 47 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

மூன்றரை இலட்சம் சம்பளம் பெற்றுக்கொள்ளும் ஒருவருக்கு 25.5 வீத வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

இதற்கிணங்க, அதிக வருமானம் பெறும் ஒருவருக்கு குறைந்த நிவாரணமும் குறைந்த சம்பளத்தை பெறும் ஒருவருக்கு அதிக நிவாரணமும் கிடைக்கும் வகையில் உழைக்கும் போது அறவிடும் வரியில் திருத்தம் மேற்கொள்ள இணங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

 

அத்துடன் தனிநபர் வருமான வரி முதலாம் கட்டம் 5 இலட்சத்தில் இருந்து 10 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை, உரிய திட்டத்தின் பிரகாரம் தனியார் வாகன இறக்குமதிக்கு அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அனுமதி வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

தாமதம் இன்றி உர மானியத்தை வழங்குவதற்கான கலந்துரையாடலை ஆரம்பித்து, விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறினார். 

views

81 Views

Comments

arrow-up