மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பாராளுமன்ற விசேட குழுவிற்கு சில யோசனைகள் முன்வைப்பு
தேர்தல்கள், தேர்தல் முறைமைகள் மற்றும் சட்டங்களில் திருத்தங்களை அடையாளம் காணவும், இது தொடர்பாக தேவையான திருத்தங்களை செய்யவும் பல அரசியல் கட்சிகள் பாராளுமன்ற தேர்வுக் குழு முன் தமது யோசனைகளை சமர்ப்பித்தன.
அதன்படி, நேற்று பிற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் சபை தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூட்டம் நடைபெற்றபோது மக்கள் ஐக்கிய முன்னணி, ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தேசிய விடுதலை மக்கள் கட்சி இதை கூறியதாக பாராளுமன்ற சபை தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற சபைத் தலைவர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.
எனினும், அந்த கட்சிகள் நேற்று குறித்த சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை. எனவே, இன்று தமது யோசனைகளை முன்வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
source:hirunews
100 Views
Comments