சீன முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
16

சீன முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

சீன முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் சீனாவிற்கான 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தின் மூன்றாவது நாள் இன்றாகும்.

 

ஜனாதிபதி சீனாவின் அரச, தனியார் நிறுவனங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள முதலீட்டு அமர்வில் இன்று(16) முற்பகல் கலந்து கொண்டார்.

 

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இந்த அமர்வு இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

 

சீனா டியான்யிங் இன்கோபரேசன் (CNTY- China Tianying Inc), 

 

வரையறுக்கப்பட்ட சைனா ஹார்பர் பொறியியல் நிறுவனம் (China Harbour Engineering Company Ltd) , 

 

வரையறுக்கப்பட்ட சீனத் தொலைத்தொடர்பு நிர்மாண கம்பெனி லிமிடெட் (China Communications Construction Company Ltd), 

 

சீனா பெட்ரோ கெமிக்கல் கூட்டுத்தாபனம் (China Petrochemical Corporation -SINOPEC Group), 

 

வரையறுக்கப்பட்ட மெடலர்ஜிகல் கோபரேசன் ஒப் சைனா நிறுவனம் (Metallurgical Corporation of China Ltd), 

 

சீன சிவில் பொறியியல் நிர்மாணக் கூட்டுத்தாபனம் (China Civil Engineering Construction Corporation), 

வரையறுக்கப்பட்ட சைனா எனர்ஜி இன்டர்நெசனல் குழும நிறுவனம் (China Energy International Group Company Ltd),

 

 குவாங்சு பொதுப் போக்குவரத்து குழுமம் (The Guangzhou Public Transport Group) உள்ளிட்ட பல முன்னணி சீன நிறுவனங்கள் இந்த முதலீட்டு அமர்வில் பங்கேற்றுள்ளன.

இந்த அமர்வின் பின்னர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சீன மக்கள் வீரர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

views

74 Views

Comments

arrow-up