மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிச்சடங்கு எளிமையான முறையில்

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவனின் இறுதிச்சடங்கை அவரது இறுதி விருப்பத்தின் பிரகாரம் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத அனுஷ்டானங்களின் பின்னர் மிகவும் எளிமையான முறையில் தமது இறுதிச்சடங்கை நடத்துமாறு அவர் கேட்டுக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தனது 75 ஆவது வயதில் பிற்பகல் காலமானார்.
ராவய பத்திரிகையின் செய்தி ஆசிரியராக கடமையாற்றிய விக்டர் ஐவன் இலங்கையின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலின் முன்னோடியாக திகழ்கின்றார்.
72 Views
Comments