வௌ்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மற்றுமொருவர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
23

வௌ்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மற்றுமொருவர் கைது

வௌ்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை தொடர்பில் மற்றுமொருவர் கைது

வௌ்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

ருவன்வெல்ல பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 2 பெண்களும் 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

 

வௌ்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் சென்ற 40 வயதுடைய பெண்ணை அவதானித்த பாதுகாப்பு அதிகாரி நடத்திய சோதனையின் போது துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

அதனை தொடர்ந்து துப்பாக்கியை வைத்திருந்த 40 வயதுடைய பெண்ணும் தொடர்மாடி குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் 68 வயதான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டனர்.

views

4 Views

Comments

arrow-up