மன்னார் துறைமுகத்தின் நில எல்லைகளை திருத்தியமைக்க தீர்மானம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
18

மன்னார் துறைமுகத்தின் நில எல்லைகளை திருத்தியமைக்க தீர்மானம்

மன்னார் துறைமுகத்தின் நில எல்லைகளை திருத்தியமைக்க தீர்மானம்

மன்னார் துறைமுகத்தின் நில எல்லைகளை திருத்தியமைக்க துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

 

முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட காணி எல்லைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் K.D.S.ருவன்சந்திர குறிப்பிட்டார்.

 

அதன்படி, திருத்தப்பட்ட எல்லைப்பகுதிகளை வர்த்தமானியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

முன்னதாக வர்த்தமானியில் வெளியிடப்பட்ட எல்லைக்குள் மன்னார் கடற்படைத்தளமும் உள்ளடங்கியுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.

 

புதிய வர்த்தமானியில் அது தவிர்க்கப்பட்டு துறைமுக வரம்புகள் குறிக்கப்படவுள்ளது.

views

15 Views

Comments

arrow-up