தென்மேல் பருவப்பெயர்ச்சியால் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
23

தென்மேல் பருவப்பெயர்ச்சியால் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

தென்மேல் பருவப்பெயர்ச்சியால் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை

தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென் பிராந்தியத்தில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

 

சில பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதனிடையே, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் இடி, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

views

6 Views

Comments

arrow-up