பேஸ்புக் பார்ட்டியில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
04

பேஸ்புக் பார்ட்டியில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்!

பேஸ்புக் பார்ட்டியில் இளம் பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்!

சட்டவிரோதமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முகநூல் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து 9 யுவதிகள் உட்பட 34 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

பாணந்துறை பகுதியிலுள்ள சுற்றுலா விடுதியொன்றை பாணந்துறை வடக்கு பொலிஸார் இன்று (04) அதிகாலை சோதனையிட்டுள்ளனர்.

 

பொலிஸார் நடத்திய சோதனையில், கஞ்சா, குஷ் மற்றும் மதுபான போத்தல்கள் போன்ற பல போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

 

விருந்தின் போது யுவதி ஒருவருக்கு பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

சந்தேக நபர்களை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஏனைய சந்தேக நபர்களின் பெற்றோரை அழைத்து பொலிஸ் பிணையில் விடுவிப்பதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

views

217 Views

Comments

arrow-up