தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கைக்கு மாபெரும் வெற்றி
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கை 1-0 என்ற விகிதத்தில் முன்னிலை வகிக்கிறது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 300 ஓட்டங்கள் எடுத்தது.
அவிஷ்க பெர்னாண்டோ தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை 118 ஓட்டங்களுடன் அடித்தார்.
மினோத் பானுக 27 ஓட்டங்கள் எடுத்தார். தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களும் சரித் அசலங்க 72 ஓட்டங்களும் எடுத்தனர்.
பந்துவீச்சில் ககிசோ ரபாடா மற்றும் கேசவ் மகராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த போட்டியில் வெற்றி பெற தென்னாபிரிக்காவுக்கு 301 ஓட்டங்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 286 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பந்து வீச்சில் அகில தனஞ்சய இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (04) கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.
source:hirunews
185 Views
Comments