665 பேர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியுள்ளனர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

665 பேர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியுள்ளனர்

665 பேர் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியுள்ளனர்

இன்று (07) காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறிய 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

முகக்கவசம் அணியாததாலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாலும் அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பொலிசார் தெரிவித்தனர்.

 

அதன்படி, அக்டோபர் 30 முதல் இதுவரை 66,668 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

மேலும், தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை மீறியதற்காக 69 வாகனங்களை பொலிசார் நேற்று பறிமுதல் செய்தனர்.

 

இந்த நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் தொடரும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:adaderana

views

98 Views

Comments

arrow-up