ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 5 இலங்கையர்களுக்கு சிகிச்சை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
19

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 5 இலங்கையர்களுக்கு சிகிச்சை

ஓமான் வளைகுடாவில் மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 5 இலங்கையர்களுக்கு சிகிச்சை

ஓமான் வளைகுடாவில் மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்த இலங்கையர்களில் ஐவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

 

அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

கப்பலிலிருந்து மீட்கப்பட்ட மற்றையவர்கள் நலமாக உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

 

ஓமான் வளைகுடாவில் ஏற்பட்ட புயலில் சிக்கி விபத்திற்குள்ளான கப்பலில் இருந்த 21 இலங்கை பணியாளர்கள் ஈரான் அவசர படையினரால் நேற்று(170 மீட்கப்பட்டனர்.

 

குக் தீவுகளின்( Cook Islands)கொடியுடன் எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பல், ஈரானின் தெற்கு நகரமான ஜாஸ்கில்(Jask)இருந்து சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் கவிழ்ந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

views

9 Views

Comments

arrow-up