தேர்தல் கடமையில் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
06

தேர்தல் கடமையில் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

தேர்தல் கடமையில் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் காலை ஆரம்பமானது.

 

தேர்தலுக்காக சுமார் 65,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

தேவையேற்படின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை இணைத்துக் கொள்ள எதிர்பார்ப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

 

இதற்கமைய பொலிஸாரால் நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

இதன்போது எவரேனும் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவார்களாயின் குறிந்த நபரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

 

அத்துடன் அமைதிக் காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறி செயற்படும் நபர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

views

92 Views

Comments

arrow-up