நிதி தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுக்க புதிய செயலணி
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
FEB
11

நிதி தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுக்க புதிய செயலணி

நிதி தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுக்க புதிய செயலணி

நிதி தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுப்பதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

 

ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிகார தலைமையில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.



இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார, தொழில் மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, நிதி திட்டமிடல் பிரதியமைச்சர் ஹர்சன சூரியப்பெரும உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.



அத்துடன், இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் நெலுமினி தவுலகல, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் A.K.D.D.D. அரந்தரவும் செயலணியில் அங்கம் வகிக்கின்றனர்.

views

54 Views

Comments

arrow-up