ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
05

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

தேர்தல் நடத்தும் முறைமைக்கு அமைய இது சாத்தியமில்லை என சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் இருப்பதாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தெரிவித்த கருத்து குறித்து நியூஸ்ஃபெஸ்ட் வினவியபோதே தேர்தல்கள் ஆணைக்குழு இதனை தெரிவித்தது.

 

ஜனாதிபதி தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு மட்டுமே வழங்கப்படும். எனினும், பொதுத்தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் அதிகாரி சுட்டிக்காட்டினார். 

 

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்தி அதில் வாக்களிப்பது குறித்து நாட்டிலுள்ள வாக்காளர்களுக்கு சரியான தௌிவுபடுத்தல் இல்லாமை இதன் முக்கிய பிரச்சினையாக உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

 

அத்துடன், சில அரசியல் கட்சிகள் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதி ​தேர்தலில் வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினால்  சிக்கல் நிலை உருவாகும் எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டது. 

 

இவ்வாறான பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தற்போது ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

 

இதுவரை எந்தக் கட்சியும் ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கவில்லை எனவும் ஆணைக்குழு கூறியது. 

views

28 Views

Comments

arrow-up