கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,320 ஆக உயர்ந்துள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,320 ஆக உயர்ந்துள்ளது

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,320 ஆக உயர்ந்துள்ளது

3,182 புதிய கொரோனா நோய்த்தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம், நாட்டில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 465,949 ஆக அதிகரித்துள்ளது.

 

நாட்டில் நேற்று பதிவான 3,182 கொரோனா தொற்றுகளில் 3,173 புத்தாண்டு கொத்தணி நோய்த்தொற்றுகள் ஆகும்.

 

நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் வெளிநாட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட 09 நபர்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

5 ஆம் திகதி ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக மேலும் 180 மரணங்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதில் 97 ஆண்களும் 83 பெண்களும் அடங்குவர்.

 

இறந்தவர்களில் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட 133 பேர் அடங்குவர். அதில் 68 ஆண்கள் அடங்குவர்.

 

அரசாங்க தகவல் திணைக்களத்தின்படி, 30 முதல் 59 வயதுக்குட்பட்ட 16 பெண்கள் உட்பட்ட 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

30 வயதிற்குட்பட்ட ஏழு பேரும் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர்.

 

அதன்படி, நாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,320 ஆகும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

101 Views

Comments

arrow-up