மியன்மார் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
08

மியன்மார் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்..

மியன்மார் சைபர் குற்ற முகாமிலிருந்து மீட்கப்பட்ட 15 பேர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்..

மியன்மாரின் மியாவாடி பகுதியில் சைபர் குற்ற முகாம்களிலிருந்து மீட்கப்பட்ட 15 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

 

மியன்மார் - தாய்லாந்து எல்லை ஊடாக பயணிப்பதற்கு தாய்லாந்தினால் அனுமதி வழங்கப்படாமையால் இவர்கள் மியன்மாரில் கடந்த 2 மாதங்களாக தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

 

மியன்மார் - தாய்லாந்துக்கான இலங்கை தூதுவர் விஜயந்தி எதிரிசிங்கவின் ஏற்பாட்டில் இருநாட்டு அரசாங்கங்களின் ஒத்துழைப்புடன் குறித்த 15 பேரும் மீட்கப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

views

22 Views

Comments

arrow-up