திருத்தப்பட்ட மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
19

திருத்தப்பட்ட மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

திருத்தப்பட்ட மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வௌியீடு

உத்தேச மின்சாரத்துறை மறுசீரமைப்பு, இலங்கை மின்சார சட்டமூலமாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தமானி நேற்று(17) வௌியிடப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

இந்த சட்டமூலம் அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

கடந்த ஜனவரி மாதம் பங்குதாரர்களால் பரிந்துரைக்கப்பட்ட திருத்தங்களும் குறித்த திருத்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சரின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் தினத்திலிருந்து 2 வாரங்களுக்கு, அதன் சட்டபூர்வமான தன்மையை பொதுமக்கள் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

11 Views

Comments

arrow-up