வாய்ப் புற்றுநோயினால் தினமும் உயிரிழக்கும் 3 பேர் - வெளியான அதிர்ச்சித் தகவல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
05

வாய்ப் புற்றுநோயினால் தினமும் உயிரிழக்கும் 3 பேர் - வெளியான அதிர்ச்சித் தகவல்

வாய்ப் புற்றுநோயினால் தினமும் உயிரிழக்கும் 3 பேர் - வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் வாய்ப் புற்றுநோயினால் தினமும் 3 பேர் உயிரிழப்பதாக மஹரகம வாய் சுகாதார நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் நிலந்த ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

 

இதேவேளை நாளாந்தம் சுமார் 6 வாய் புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வைத்தியர் நிலந்த ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.

 

இந்நிலையில் இலங்கையில் 5 வயதுடைய குழந்தைகளில் 63 வீதமானோர் பற்கள் சிதைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

பெரும்பாலான குழந்தைகள் இரவு உறங்கச் செல்வதற்கு முன் பல் துலக்குவதில்லை என பாடசாலை சுகாதார ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

23 Views

Comments

arrow-up