ஊழியர்களுக்கு விடுமுறை கொடுங்கள் - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

தனியார் துறை ஊழியர்களுக்குத் விடுமுறை வழங்குமாறு தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தொழில் வழங்குநர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
எதிர்வரும் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிக்கும் வகையில் விடுமுறை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரிவு 84A (1) இன் படி, இந்த விடுப்பு ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு அல்லது தனிப்பட்ட விடுப்பு இல்லாமல் வழங்கப்பட வேண்டும்.
பணியிடத்திலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ள தூரத்தின் அடிப்படையில் வழங்கப்படும் விடுமுறையின் நேரம் தீர்மானிக்கப்பட வேண்டும்.
30 Views
Comments