புதிய மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி - கஞ்சன விஜேசேகர
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
09

புதிய மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி - கஞ்சன விஜேசேகர

புதிய மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி - கஞ்சன விஜேசேகர

மின்சார சபை மறுசீரமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மின்சக்தி - எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.  

 

அதற்மைய, மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான சட்டமூலம் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

குறித்த சட்டமூலம் இந்த வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

மின்சாரத் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சபை சட்டமூலத்தில் காணப்பட்ட சில குறைபாடுகளை மையப்படுத்தி வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றிருந்தன.

 

இந்த சட்டமூலம் கடந்த டிசம்பர் மாதம் 9ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்பட்டிருந்தது.

 

வெளியிடப்பட்ட சட்டமூலத்தின் சிங்கள மொழி பிரதியில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

 

அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

views

9 Views

Comments

arrow-up