வட கொரிய தலைவர் வெளிநாட்டு படங்களை ஒளிபரப்ப தடை விதித்தார்
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் வெளிநாட்டு திரைப்படங்கள், பேஷன் மற்றும் ஆடை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து புதிய தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதன் நோக்கம் வட கொரியர்கள் வெளி உலகத்திலிருந்து தகவல்களைப் பெறுவதைத் தடுப்பதாகும்.
இளைஞர்கள் பிற நாடுகளின் கலாச்சாரங்களைத் தழுவுவதைத் தடுக்கும் முடிவை வட கொரியத் தலைவர் எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் நபர்களைக் கைது செய்ய கிம் ஜாங் உன் ஒரு சிறப்பு பிரிவையும் அமைத்துள்ளார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக எல்லைகள் மூடப்பட்டதால் வர்த்தக உறவுகளும் துண்டிக்கப்பட்டு வட கொரியர்கள் மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கிம் ஜாங் உன் தொடங்கிய நிராயுதபாணியான போரினால் நாட்டின் மக்கள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கான வட கொரியர்கள் பட்டினி கிடப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
208 Views
Comments