தாய்லாந்து நவம்பர் 1 முதல் 10 நாடுகளுக்கு அனுமதி
தாய்லாந்து ஜனவரி 1 ஆம் திகதி முதல் 10 குறைந்த ஆபத்துள்ள நாடுகளிலிருந்து முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கும் என்று தாய்லாந்து பிரதமர் சான் ஓச்சா அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயால் வீழ்ச்சியடைந்த தாய்லாந்து சுற்றுலாத் துறையை மீட்டெடுப்பதே இதன் நோக்கமாகும்.
அரச தொலைக்காட்சியில் பேசிய தாய்லாந்து பிரதமர் தக்சின் ஷினவத்ரா, ஐக்கிய இராச்சியம், சீனா, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா உட்பட 10 நாடுகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மாத்திரம், தாய்லாந்து சுற்றுலாத்துறை சுமார் 50 பில்லியன் டொலர்களை இழந்தது.
2019 இல் சுமார் 40 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வருகை தந்தனர். ஆனால் இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 70,000 பேர் மட்டுமே வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
274 Views
Comments