மீண்டும் அதிகரிக்கும் கோவிட் தொற்று மற்றும் மரணங்கள்...
கோவிட் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக பலர் நினைத்தாலும், அது இன்னும் ஆரம்ப நிலையில் உள்ளதென உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது.
உலகளவில் கோவிட் வைரஸுக்கு எதிரான தடுப்பூசி இருந்தபோதிலும், பல நாடுகளில் கோவிட் மரணங்கள் மற்றும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
WorldDometers இணையதளத்தின்படி, அமெரிக்கா நேற்று (06) உலகின் அதிக எண்ணிக்கையான 2,102 மரணங்களையும் 170,000 க்கும் அதிகமான நோய்த்தொற்றுகளையும் பதிவு செய்துள்ளது.
ரஷ்யாவில் 929 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. 25,000 க்கும் அதிகமானோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மெக்சிகோவில் நேற்று பதிவான கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 790 ஆக உயர்ந்துள்ளது, 7,000 க்கும் அதிகமானோர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரேசிலில் இருந்து 543 மரணங்கள் மற்றும் 18,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றாளர்கள் கடந்த நாளில் பதிவாகியுள்ளன.
நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புடன், கோவிட் ருமேனியாவில் 328, உக்ரைனில் 320, இந்தியாவில் 315 மற்றும் துருக்கியில் 236 மரணங்களைப் பதிவு செய்துள்ளது, அந்த நாடுகளில் முந்தைய தரவுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் கூட நேற்று 39,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன, மொத்தம் 143 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
99 Views
Comments