பாகிஸ்தானில் நிலநடுக்கம்...
பாகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த அறிக்கைகளின்படி, சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
200 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கம் 5.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒரு பெண் மற்றும் ஆறு குழந்தைகள் அடங்குவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தானின் பல பகுதிகளில் தற்போது மின் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
251 Views
Comments