எரிசக்தி நெருக்கடி குறித்து இந்திய அரசாங்க உயர்மட்ட கலந்துரையாடல் நடத்துகிறது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
12

எரிசக்தி நெருக்கடி குறித்து இந்திய அரசாங்க உயர்மட்ட கலந்துரையாடல் நடத்துகிறது

எரிசக்தி நெருக்கடி குறித்து இந்திய அரசாங்க உயர்மட்ட கலந்துரையாடல் நடத்துகிறது

நிலக்கரி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக எழுந்துள்ள எரிசக்தி நெருக்கடி குறித்து விவாதிக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.

 

இந்த நிகழ்ச்சியில் பாஜக அரசின் வலிமையான உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிலக்கரி மற்றும் மின் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

இந்தியாவின் மின்சார உற்பத்தியில் 70% நிலக்கரி எரி மின் நிலையங்களிலிருந்து வருகிறது.

 

ஆனால் நிலக்கரி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை காரணமாக அவற்றின் ஆற்றல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

 

இதன் காரணமாக உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் கேரளாவுக்கு கடந்த வார இறுதியில் மின்சாரம் தடைபட்டது.

 

உலக சந்தையில் நிலக்கரியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது மற்றும் இந்தியாவில் அனல் மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யும் செலவு 12 வருட உச்சத்தை எட்டியுள்ளது.

views

217 Views

Comments

arrow-up