இராவணன் உயிரிழந்தார்
வால்மீகியின் இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட இந்திய சின்னத்திரை நாடகமான இராமாயணத்தில் இராவணனாக நடித்த அரவிந்த் திரிவேதி நேற்று மாரடைப்பால் தனது 82 வது வயதில் காலமானார்.
இராமானந்த் சாகரின் இராமாயணம் இந்தியர்களால் அதிகம் பார்க்கப்பட்ட மற்றும் அதிக வசூல் செய்த கதையாக கருதப்படுகிறது.
முதலில் இராவணன் வேடத்தில் நடித்த அரவிந்த் திரிவேதிக்கு அவருடன் சீதா வேடத்தில் நடித்த தீபிகா சிக்லியாவும் மரியாதை செலுத்தினார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ட்விட்டரில் அரவிந்த் திரிவேதிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
203 Views
Comments