ஒலிம்பிக்கிற்கு முன் விளையாட்டு வீரர்கள் கொரோனா தடுப்பூசி பெற வேண்டும் - பிரித்தானிய ஒலிம்பிக் சங்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னர் விளையாட்டு வீரர்கள் கொரோனா தடுப்பூசி பெற வேண்டும் என்று பிரித்தானிய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) தெரிவித்துள்ளது.
இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் விளையாட்டுக்கு முன்பு பிரிட்டிஷ் ஒலிம்பிக் அணியின் 90% விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படலாம் என அதன் நிர்வாக இயக்குனர் அண்டி அம்சன் கூறியுள்ளார்.
இருப்பினும், சில விளையாட்டு வீரர்கள் தடுப்பூசி போட மறுத்துவிட்டதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 23 ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
source:newsfirst
290 Views
Comments