மேத்தீவ்ஸ் மீண்டும் தேசிய அணியில் சேரத் தயாராக உள்ளார்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
12

மேத்தீவ்ஸ் மீண்டும் தேசிய அணியில் சேரத் தயாராக உள்ளார்

மேத்தீவ்ஸ் மீண்டும் தேசிய அணியில் சேரத் தயாராக உள்ளார்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் சேர தயாராக இருப்பதாக முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்தீவ்ஸ் இலங்கை கிரிக்கெட்டுக்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இது தொடர்பாக மேத்தீவ்ஸுக்கும் இலங்கை கிரிக்கெட்டுக்கும் இடையே அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

 

எவ்வாறாயினும், இன்றைய விசேட கூட்டத்தில் மேத்தீவ்ஸின் விருப்பக் கடிதத்தை இலங்கை கிரிக்கெட் பரிசீலிக்கும் என்று கிரிக் இன்ஃபோ இணையத்தளம் தெரிவித்துள்ளது.

 

இந்த வருட தொடக்கத்தில், எதிர்கால சுற்றுப்பயணங்களுக்காக இலங்கை அணியில் சேர விரும்பவில்லை என்று ஏஞ்சலோ மேத்தீவ்ஸ் கூறினார்.

 

அது மேத்தீவ்ஸ் உட்பட சிரேஷ்ட வீரர்களுக்கிடையே இலங்கை கிரிக்கெட்டின் கிரிக்கெட் ஒப்பந்தங்கள் தொடர்பாக பல மாதங்களாக சர்ச்சைக்கு பின்னராகும்.

 

மேத்யூஸுக்கு 50,000 டாலர் சம்பளக் குறைப்பை இலங்கை கிரிக்கெட் ஆலோசித்திருந்தது.

 

இந்த காலகட்டத்தில்தான் ஏஞ்சலோ மேத்தீவ்ஸ், திமுத் கருணாரத்ன மற்றும் தினேஷ் சந்திமால் ஆகியோர் இலங்கை வரையறுக்கப்பட்ட ஓவர் அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.

 

மீண்டும் அணியில் சேர வாய்ப்பு கிடைத்தால், மேத்தீவ்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்.

 

நவம்பரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

views

268 Views

Comments

arrow-up