ஓமன் வீரர்களின் மீது கவனம் - தசுன் ஷானக
ஓமன் வீரர்களின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை காணொளிகள் மூலம் பார்த்து, அவர்களின் விளையாட்டு முறையை ஆய்வு செய்வதாக இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் ஓமன் இடையே நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டி குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
இலங்கை மற்றும் ஓமன் அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடர் இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பிக்கின்றது. இலங்கை அணி இதுவரை ஓமன் வீரர்களுடன் கிரிக்கெட் போட்டியில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் போட்டி அக்டோபர் 7 ம் திகதியும், இரண்டாவது போட்டி அக்டோபர் 9 ம் திகதியும் நடைபெறும்.
242 Views
Comments