சீரற்ற வானிலை காரணமாக இலங்கை கிரிக்கெட் அணியின் விமானப்பயணம் தாமதமானது
ஓமானில் சீரற்ற வானிலை காரணமாக இலங்கை அணியின் விமானத்தை தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஓமானில் 'ஷஹீன்' என்ற வெப்பமண்டல புயல் நுழைந்ததே இதற்குக் காரணமாகும்.
வெப்பமண்டல புயலான 'ஷஹீன்' காரணமாக விமானங்களை தாமதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இன்று மாலை இலங்கை அணி ஓமானுக்கு செல்ல திட்டமிட்டிருந்தாலும், விமானத்தை தாமதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, இன்று இரவு மற்றொரு விமானத்தில் மீண்டும் இலங்கை அணி ஓமானுக்கு செல்ல உள்ளது.
269 Views
Comments