ஐபிஎல் குமிழியை உடைத்த கிறிஸ் கெயில்..
ஐபிஎல் உயிரியல் பாதுகாப்பு குமிழியிலிருந்து மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் நீங்கி உள்ளதாக பஞ்சாப் கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.
உயிரியல் பாதுகாப்பு குமிழின் கீழ் விளையாடியதால் ஏற்பட்ட சோர்வின் காரணமாக அவர் வெளியேறியதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் சேருவதற்கு முன்பு, கிறிஸ் கெய்ல் கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாடினார். அங்கு அவர் ஒரு உயிர் பாதுகாப்பு குமிழின் கீழ் விளையாட வேண்டியிருந்தது.
எதிர்வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக எதிர்கொள்ள அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
248 Views
Comments