இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடிய பல இங்கிலாந்து வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்
ஞாயிற்றுக்கிழமை (4) இலங்கைக்கு எதிரான இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூன்று உறுப்பினர்களும், நான்கு அதிகாரிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீரர்களின் பெயர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
கடந்த திங்கட்கிழமை பிரிஸ்டலில் நடந்த வைத்திய பரிசோதனையின்போது அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் அனைத்து வீரர்களும் ஊழியர்களும் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
source:adaderana
184 Views
Comments