ஈரானில் விலங்குகளின் தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் நெத்திலி மீன்களுக்கு கல்பிட்டியில் சீல்...
மனித நுகர்வுக்கு தகுதியற்ற 10,000 கிலோ நெத்திலி மீன்களை முத்திரையிட கல்பிட்டி பொது சுகாதார ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கல்பிட்டி பொலிஸ் சிறப்பு பணியகத்தின் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
ஈரானில் விலங்குகளின் தீவனத்திற்கு பயன்படுத்தப்படும் நெத்திலி மீன்களே இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
source:newsfirst
89 Views
Comments