சமூக ஊடகங்களில் போலி செய்திகளுக்கு எதிராக விசேட CID குழு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
07

சமூக ஊடகங்களில் போலி செய்திகளுக்கு எதிராக விசேட CID குழு

சமூக ஊடகங்களில் போலி செய்திகளுக்கு எதிராக விசேட CID குழு

சமூக ஊடகங்களில் எதிர்மறையான மற்றும் தவறான செய்திகளை பரப்புவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) விசேட அதிகாரிகள் குழு ஒன்றினை நியமித்துள்ளது.

 

அதன்படி, கொரோனா மற்றும் டெங்கு கட்டுப்பாடு உள்ளிட்ட வேறு ஏதேனும் முக்கியமான பிரச்சினை தொடர்பான தவறான தகவல்களை பரப்பும் நபர்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

 

மேலும், இதுபோன்ற தவறான தகவல்களை உருவாக்கி பகிர்ந்து கொள்பவர்கள் மீது குழு கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

source:adaderana

views

152 Views

Comments

arrow-up